வணக்கம்
நண்பர்களே!!!!
சென்ற பதிவில் குமரி
கண்டத்தின் தோற்றத்தையும் அங்கு வாழ்ந்த குமரி
மாந்தரையும் பற்றிக் கூறி இருந்தேன்.
அதோடு அவர்களின் சைகை மொழி உருவான
வரலாற்றையும் கூறி இருந்தேன். அதை
முதலில் படித்தவுடன், இந்த இடத்தில், இந்த மனிதரிடம்
தான் உலகையே வியக்க வைக்கும்,
இளமைத் தன்மை மாறாத ஒரு
செம்மொழி பிறந்திருக்குமென்று என்னால் யூகிக்க முடியவில்லை.
ஆனால் இன்று மேலை நாடுகளும்
வியக்கும் வண்ணம் அழியாத மாட்சிமையை
கொண்டுள்ள நம் தாய் மொழி
முதலில் உலகை பார்த்தது இங்கே
தான். தமிழை முதல் முதலில்
தாய் மொழியாக கொண்டவன் இந்த
குமரி மாந்தன் தான் என்பதை
நாம் இங்கு மறுத்துவிடமுடியாது. சரி,
இப்போது கூறுங்கள் நம் தாய் மொழி
ஏன் மனித இனம் பேசிய
முதல் மொழியாக இருக்கக்கூடாது?
இதற்கான
பதிலை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இப்போது நம் மொழி
இந்த சைகை மொழியிலிருந்து எப்படி
உருவானதாக கூறப்படுகிறது என்று பார்போம்.
தமிழின் முதல் பிறந்தநாள்:
தமிழ்- இந்த பெயர்
நம் மொழிக்கு எப்படி வந்திருக்கும் என்ற
ஆவல் உங்களைப்போல் எனக்கும் இருந்தது. இந்த பெயர் தோன்றியதை
அறிவதற்கு முன் தமிழின் எழுத்துக்களின்
தோற்றம் பற்றிய தகவல்களை சற்று ஆராய்வோம்.
முன்னே கூறிய சைகை மொழியான
“தோரா” என்று கூறப்படும் மொழிக்கும்
தமிழ் மொழிக்கும் இணைப்பாக விளங்கியது சுட்டொலிகள் எனப்படும் சுட்டிக்காட்டும் ஒலிகள் தான்.
இதுநாள் வரை சைகையிலேயே
பேசிக்கொண்ட குமரி மாந்தன் அவனது
மொழிக்கு எழுத்துருவம் கொடுத்த அந்த நாளையே
தமிழின் முதல் பிறந்தநாளாக கருத்தில்
கொள்ளுவோம். இந்த எழுத்துக்கள் தோன்றிய
வரலாற்றை மற்றொறு பதிவில் விரிவாக
கூறுகிறேன். சரி, இன்றிலிருந்து சுமார்
ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்
ஏதோ ஒரு நாளில், எப்போதோ
ஒரு நேரத்தில் தான் குமரி மாந்தன்
அவனின் மொழிக்கு எழுத்துருவம் தந்திருப்பான். ஒருவேளை அந்த நாளையும்
நேரத்தையும் சரியாக தெரிந்திருந்தோமானால் தமிழின் ஆயுட்காலத்தை
கணித்துவிட முடியுமோ என்னவோ.
குமரிமாந்தரின் பரிணாம வளர்ச்சி- ஒரு அறிவியல் பார்வை:
சார்லஸ் டார்வினின் உயிரினத்தோற்றம்(origin of life) எனும் நூல் |
குரங்கிலிருந்து ஆதி மனிதனின் மூளை வளர்ச்சி அடைந்ததை காட்டும் பட்டியல் |
அன்றைய ஆதி மனிதன் தன் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிடுவதை சித்தரிக்கும் வரைபடம் |
எழுத்துருவம் பெறும் சைகை மொழி:
சரி, இவ்வாறாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாக
கருதப்படும் நம் குமரிமாந்தன் தன் சைகை மொழிக்கு எழுத்துருவம் கொடுக்கவேண்டும் என சிந்தித்ததும்
இந்தக் காலகட்டத்தில் தான் இருந்திருக்க முடியும் என்பது என் யூகம். அவன் தன் நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிட்டதன் விளைவாக
உருவானவை தான் வேட்டையாடும் கருவிகள், விவசாய கருவிகள் மற்றும் பல கலை படைப்புகள் என்கிறது
ஆய்வு. இவையெல்லாம் அவனின் மனதில் ஏற்பட்ட ஏதோ ஒரு உந்துதலின் விளைவாகத் தான் உருவாகி
இருக்கக்கூடும். அதே உந்துதல் தான் அவனின் கருத்துகளை எழுத்துக்கள் மூலம் பரிமாறிக்
கொள்ளலாம் எனவும் சிந்திக்க தூண்டி இருக்கக்கூடும் என்பது என் கருத்து. இந்த எண்ணங்களின்
விளைவாக தான் அன்றைய குமரி கண்டத்தில் நம் தமிழ் பிறந்திருக்ககூடும். ஆனால் இவை எல்லாம்
இப்படித்தான் நடந்திருக்கும் என்பது முற்றிலும் கணிப்புகளே. உண்மையில் எப்படி வேண்டுமாயினும்
நடந்திருக்கலாம். உண்மையிலேயே இப்படித்தான் குமரிமாந்தன் பரிணாம வளர்ச்சி அடைந்தான்
என்று நான் ஆணித்தரமாகக் கூற வேண்டுமென்றால் என் வயது இப்போது லட்சங்களில் இருக்கவேண்டும்.
எது எப்படியோ, இதுவரை உள்ள வரலாற்று ஆதாரங்களின்
மூலம், நம் மொழி இப்படித்தான் எழுத்துருவம் பெற்றிருக்கக்கூடும் என
நம்புவோம்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாம் மறந்துவிடக்கூடாது. குமரிமாந்தனின் பரிணாம
வளர்ச்சியின் விளைவாக அவன் குரங்கிலிருந்து பிரிந்து மனிதனாக மட்டும் மாறவில்லை, தன்
மொழிக்கு எழுத்துருவம் கொடுத்ததன் மூலம் உலகின் முதல் தமிழனாகவும் மாறி இருக்கிறான்
என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அன்று அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்தபோது பிறந்தது
தமிழ் மட்டுமல்ல நம் தமிழ் சமூகமும் தான்.
இவ்வாறு
பிறந்ததாக கருதப்படும் நம் மொழிக்கு தமிழ்
என்று யார் பெயர் வைத்தார்கள்?
அப்படியே யாரேனும் வைத்திருந்தால் ஏன் அந்த மூன்று
எழுத்துக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? தமிழ் மொழி பிறந்த
அந்த காலக்கட்டத்திலேயே அது தமிழ் என்று
தான் வழங்கப்பட்டதா?
இந்த
கேள்விகளுக்கான பதில்களுடன் உங்களை அடுத்த முறை சந்திக்கிறேன்.
இந்த பதிவிற்கு மூலமாக விளங்கிய இணைப்புகள்:
2) http://vavuniya.com/writing/essay1.htm
இந்த பதிவிற்கு மூலமாக விளங்கிய இணைப்புகள்:
2) http://vavuniya.com/writing/essay1.htm
No comments:
Post a Comment