Tuesday 31 December 2013

பதிப்பு ௯ (9) - ஆரியமா திராவிடமா? - பாகம் 1.


வணக்கம்!


திராவிட தத்துவத்தின் ஆதாரக்கூறுகளை அலசுவதற்கு முன் ஆரிய படையெடுப்பு தத்துவத்தில் உள்ள சில முரண்பாடுகளைபற்றி முதலில் கூறுகிறேன். அதற்கு பிறகு சிந்துசமவெளியின் மக்கள் ஆரியர்களா என்பதை நீங்களே தீர்மானித்துகொள்ளலாம். ஆரியபடையெடுப்பு தத்துவத்தின் பலங்களாக விளங்குவது ரிக் வேதம், மஃஸ் முல்லெரின் வாதம் மற்றும் வடமேற்கிலிருந்து வந்த நாடோடி குதிரைபடை வீரர்களின் படையெடுப்பை பற்றி முன்வைக்கப்படும் கருத்துகளே ஆகும். இந்த மூன்று முக்கிய கருத்துகளிலுமே அந்த தத்துவதின் முரண்கள் ஒளிந்து இருப்பதை நாம் இங்கு உற்று நோக்கவேண்டியுள்ளது.

முரண்படும் மூத்தவேதம்:

முதலில் ரிக்வேதமும் இந்த தத்துவமும் முரண்பட்டு நிற்கும் சில இடங்களை குறிப்பிடுகிறேன்.


  • வேத இலக்கியங்களின் படி கிமு 3102 இல் கிருஷ்ணரின் மறைவிற்குபின் கலியுகம் பிறந்ததாம். இதுவே வேதங்களின் அறிவு எழுத்துருவம் பெற்ற காலமாக வேத வியாசர் கூறியதாக சொல்லபடுகிறது. கால அளவீட்டு ஆய்வுகளின்படி ரிக் வேதம் இயற்றப்பட்ட காலம் கிமு 4500 முதல் 3000திற்குள் இருக்கலாம் என உறுதிப்படுகிறது. எப்படியும் வேதங்களில் மூத்ததான ரிக்வேதம் தான் முதலில் எழுத்துருவம் பெற்றிருக்கமுடியும். எனவே சுமார் 1800 ஆண்டுகளுக்கு பின் வந்த ஆரியர்கள் இந்த வேதங்களை எழுதியதாகவோ கொண்டுவந்ததாகவோ நம்புவதில் தருக்கமில்லை.
  • மேலும் வடமேற்கிலிருந்து வரும் படையெடுப்பைப்பற்றி குறிப்பிடும் ரிக் வேதம் சிந்துசமவெளியின் நகரங்கள், நீர்மேலாண்மை வசதிகள், மக்கள் மற்றும் அவர்களின் கலைத்திறன்களைப் பற்றிய எந்த தகவல்களையும் கூறவில்லை.
  • ரிக் வேதத்தில் பருத்தியின் பயன்பாட்டைபற்றியும் எந்த குறிப்பும் இல்லை.  ஆனால் சிந்து சமவெளியில் பருத்தி ஒரு பிரதாண பயிறாக விளங்கியது நாம் அறிந்ததே. இதுவும் ரிக் வேதம் சிந்துசமவெளிக்கு முந்தய காலத்தில்தான் இயற்றபற்றிருக்ககூடும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதன்பின்னும் ரிக் வேதம் ஆரியர்களுடையது எனவோ ஆரியர்கள் தான் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தனர் எனவோ கூறுவது எந்த அளவிற்கு நியாயப்படி பொருந்தும் என்பதை நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள்.

முல்லெரும் முரண்பாடுகளும்:

அடுத்ததாக இந்த தத்துவத்தை முன் வைத்த மஃஸ் முல்லெர் இதிலிருந்து எப்படி முரண்படுகிறார் என காண்போம்.

  • 1853இல் மஃஸ் முல்லெர் “ஆரியா” எனும் வார்தையையும் ஆரிய இனத்தத்துவத்தையும் முதலில் அறிமுகப்படுத்தினார். இது சிந்துசமவெளி நகரங்கள் கண்டுபிடிக்கபடுவதற்கு சுமார் 70 ஆண்டுகள் முன் என்பது குறிப்பிடதக்கது. சிந்துசமவெளி மற்றும் இந்திய வரலாற்றையே உருவாக்கியவர்கள் இந்த ஆரியர்கள் தான் என இவர் கூறினார். மேலும் இந்துமதத்திற்கான அனைத்து இலக்கியங்களுமே வடமேற்கிலிருந்து வந்ததெனவும் இவரின் தத்துவங்கள் கூறின.
  • ஆனால் இந்த மஃஸ் முல்லெர் 1888இல் “ஆரியா” எனும் வார்த்தைக்கான விளக்கத்தை திருத்தி அமைத்துள்ளார். அதாவது ஆரியா என்பது ஒரு இனத்தை குறிக்கும் சொல் இல்லை எனவும் அது ஒரே மொழியை பேசும் ஒரு உயர்ந்த மக்கள் கூட்டதை தான் குறிக்கிறது எனவும் கூறியுள்ளார். இதுவே அவரின் முன் கூறிய தத்துவத்திற்கு முரணாக அமைந்துள்ளது.
    படம்: aryatva.com.
  • 1866இல் இவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வேதங்களில் கூறியபடி ஒரு சமூகம் வாழ்ந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மொகஞ்ச தாரோவை தோண்டியெடுத்த திரு ஜான் மார்ஷல் அவர்களும் இதை உறுதி படுத்தியுள்ளார். அதன்படி பார்த்தாலும் ஆரிய படையெடுப்பு நிகழ்ந்த காலமும் சிந்து சமவெளிநாகரீகத்தின் காலமும் முரண்படுகிறது.
  • மேலும் வடமேற்கிலிருந்து வந்த ஆரியர்களை பற்றி கூறும் இந்த தத்துவம் வடமேற்கில் இருக்கும் எந்த ஒரு நதியையோ நிலப்பரப்பையோ பற்றி குறிப்பிடுவதில்லை.

படையெடுப்பு?!

அடுத்ததாக அந்த படையெடுப்பிலேயே சில முரண்களுள்ளதை சற்று ஆராய்வோம்.
  • ஆரிய படையெடுப்பு நிகழ்ந்து அவர்களே சிந்து சமவெளியில் நாகரீகத்தை நிறுவினர் என்று ஏற்றுகொள்ளும் முன் சில கேள்விகளுக்கு பதில் காணுவது அவசியம்.
  • ஒரு நிலபரப்பில் வாழ்ந்து வரும் பூர்வகுடிமக்களை வீழ்த்தி அவர்களை விரட்டியோ அடிமைபடுத்தியோ அங்கு ஆளுமை செழுத்தும் முறையே “படையெடுப்”பாகும். அப்போது ஆரிய படையெடுப்பின் போது சிந்து சமவெளியில் பூர்வகுடிகள் இருந்திருக்க தானே வேண்டும். இல்லாவிடில் அது எப்படி ஒரு படையெடுப்பாகும்?
    படம்: sol.com.au.
  • அந்த காலகட்டத்தில் மிகவும் சீர்பட்ட அறிவைகொண்டு ஒரு நாகரீகத்தை ஆரியர்கள் வருவதற்கு முன்னே உருவாக்கிய ஒரு இனத்தை எந்த ஒரு வரலாற்று பின்னணியும் இல்லாத சில குதிரைப்படை நாடோடிகள் வீழ்த்திவிட்டனர் எனபது எந்த அளவிற்கு நம்பும்படி உள்ளது?
  • சிந்து சமவெளி தளங்களில் அம்புகள், ஆயுதங்கள் மற்றும் கேடையங்கள் போன்ற எந்த போர்கருவிகள் பயன்பாட்டில் இருந்தமைக்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. பின் எப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்ததை நம்பமுடியும்?
  • சில வரலாற்று ஆய்வாளர்கள், சிந்து சமவெளியின் பிரதான நதிகள் வற்றிய காலமும் ஆரிய படையெடுப்பு நிகழ்ந்தாக கூறப்படும் காலமும் ஒன்றுதான் என கூறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு; நதிகள் வற்றியதால் சிந்துசமவெளி மக்கள் புலம் பெயர்ந்திருக்கலாம். பின் அங்கு வந்து ஆரியர்கள் குடியேரி இருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.
  • வேதங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஆரிய படையெடுப்பிற்கு முன் சிந்துசமவெளியில் ஒரு பெரும் இனம் வாழ்ந்துள்ளது என்பதும் இந்த இனம் ஆரியர்கள் இல்லை என்பதும் மேல் கூறிய கருத்துகளால் உறுதிபடுகிறது.
நான் இங்கு குறிப்பிட்டுள்ளதெல்லாமே ஆதாரங்களின் அடிப்படையில் ஆரியபடையெடுப்பு தத்துவத்திற்கு எதிராக நிலவும் சில கருத்துகளே ஆகும். இதை ஏற்றுகொள்ளுவது முற்றிலும் தனிபட்ட விருப்பமே. ஆரிய படையெடுப்பு தத்துவத்தை முன்மொழிந்த ஆங்கிலேயர்கள் அப்போது நம்மை ஆளுவதற்காக நம் வரலாற்றை மாற்றிகூறி நம்மை நம்ப வைத்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர். இதுவும் விவாதத்திற்குறிய கருத்தே ஆகும். எது எப்படியோ ஆரியர்கள் எனப்படுவோர் சிந்து சமவெளியில் நாகரீகத்தை உருவாக்கவில்லை என்றால் அங்கு யார் தான் அப்படி ஒரு சரித்திரத்தை படைத்தனர் என்பது இன்னும் ஒரு கேள்வியாகதான் உள்ளது. வேதங்களில் குறிப்பிட்டுள்ள அந்த இனம் திராவிடமாகவும் அங்கு வழக்கிலிருந்தது தமிழாகவும் ஏன் இருந்திருக்கக்கூடாது?

இதை பற்றி அறிய ஒரு மொழி ரீதியான அறிவும் ஆய்வும் இங்கு அவசியமாகிறது. ஆரியமா திராவிடமா எனும் விவாதத்திலிருந்து வெளியில் வந்து நம் வரலாற்றை அறியும் ஒரு முற்போக்கான ஆர்வமும் உந்துதலும் இருந்தால் மட்டுமே நம் வரலாற்றை அறியவும் காக்கவும் முடியும். விவாதங்களையும் தத்துவங்களையும் மீறி உண்மை என்று ஒன்று உள்ளது. அது நம் இன்று வாழும் இடங்களோடும் பேசும் மொழியோடும் தொடர்பு பட்டு இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் வியப்பு. இதற்கு துணை நிற்கும் கருத்துகளுடனும் மேல் கூறிய கேள்விகளின் பதில்களுடனும் திராவிடதத்துவத்தின் ஆதாரங்களையும் சிந்து சமவெளிக்கும் திராவிடத்திற்கும் உள்ள ஒற்றுமைகளுடனும் மீண்டும் அடுத்த "ஆங்கில" ஆண்டில் சந்திக்கிறேன்.

தேடல் தொடரும்………

குறிப்புதவிகளுக்கு நன்றி:
  1. Aryan Civilization, A Continuity of Indus Valley Civilization”. rottenview.blogspot.in. Retrieved 2013-10-12.
  2. Saraswati River Necessitates Rewriting Of Indian History” by V.S.Gopalakrishnan. creative.sulekha.com. Retrieved 2013-12-23.
  3. “Death of the Aryan Invasion Theory” by Stephen Knapp. stephen-knapp.com. Retrieved 2013-12-23.
  4. “Aryan Invasion Theory”. Vedic Knowledge Online. Veda. veda.wikidot.com. Retrieved 2013-12-28.
  5. “What is Aryatva?”. Aryan Invasion Theory. Aryatva. In pursuit of everything noble. aryatva.com. Retrieved 2013-12-30.
  6. “Müller, Max”. Encyclopaedia Britannica. britannica.com. Retrieved 2013-12-30.
  7. “The Myth of the Aryan Invasion of India” By David Frawley. sol.com.au. Retrieved 2013-12-30.
  8. “Gurukul Education” Education. santodhavramvedicgurukul.com. Retrieved 2013-12-30. 
  9. Why the Rig Vedas Cannot Overlap with the Indus Valley Civilisation” Beyond Highbrow by Robert Lindsay.robertlindsay.wordpress.com.  Retrieved 2013-12-23.
  10. The Myth of the Aryan Invasion of India” By David Frawley. hindunet.org. Retrieved 2013-10-12. Retrieved 2013-12-21.